சென்னை: சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம் மற்றும் கரோனா நோயாளிகளின் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் செப்டம்பர் 21ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 48,94,362 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21ஆம் தேதி மட்டும் 14,020 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில், 36.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 12.43 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகள் எத்தனை பேர்?
சென்னையில் செப்டம்பர் 22ஆம் தேதி காலை நிலவரப்படி 2,055 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.48 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.37 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 8,450 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக அண்ணாநகர் (207), தேனாம்பேட்டையில் (213) கரோனா நோயாளிகள் உள்ளன. சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,700 என்ற அளவிலேயே இருந்த நிலையில் தற்போது இது 2 ஆயிரத்தை எட்டியுள்ளது.