மும்பை: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலியாக கடந்த மூன்று வர்த்தக நாட்களில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவுக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 16) பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் மேலாக மீண்டன. குறிப்பாக, வாகனத் துறை, வங்கி மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஏற்றத்தால் நிஃப்டி 50 குறியீடு 23,400 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.
30 பங்குகளைக் கொண்ட, மும்பை பங்குச் சந்தையான, சென்செக்ஸ் குறியீடூ 938.93 புள்ளிகள் உயர்ந்து 75,502.85 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 257.70 புள்ளிகள் உயர்ந்து 23,408.80 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸ் அதிகபட்சமாக 75,805.27 புள்ளிகளையும் பிறகு குறைந்தபட்சமாக 73,949.76 புள்ளிகளையும் எட்டியது.
சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்கு விலை 4.22 சதவீதம் உயர்ந்த நிலையில் டிரெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, பவர் கிரிட் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் சரிந்தன.
வாகனம், வங்கி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பங்குகளை அதிக அளவில் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாக, வர்த்தக முடிவில் வலுவான மீட்சியைப் பதிவு செய்தது இந்திய பங்குச் சந்தை.
நிஃப்டி-யில் மஹிந்திரா & மஹிந்திரா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், டிரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ, மேக்ஸ் ஹெல்த்கேர், சன் பார்மா, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
துறை ரீதியாக, ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, உலோகம் 0.3 முதல் 1% வரை உயர்ந்தன. மாறாக மீடியா, எண்ணெய் & எரிவாயு, மருந்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பங்குகள் 0.5 முதல் 2.7% வரை சரிந்தன.
ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங் ஹேங் செங் குறியீடு உயர்ந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க பங்குச் சந்தை (வெள்ளிக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
தரவுகள் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.10,716.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.9,977.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
குஜராத் கேஸ், தீபக் நைட்ரைட், பெர்ஜர் பெயிண்ட்ஸ், திரிவேணி டர்பைன், மகாநகர் கேஸ், டாடா கெமிக்கல்ஸ், சம்பல் ஃபெர்டிலைசர்ஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ், ஜேகே லட்சுமி சிமென்ட், பாட்டா இந்தியா, ரிலாக்ஸோ ஃபுட்வேர், குஜராத் ஸ்டேட் பெட்ரோ, ட்ரைடென்ட், இர்கான் இன்டர்நேஷனல், ஐடிசி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்த நிலையை அடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.41 சதவீதம் உயர்ந்து 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock market benchmark indices Sensex and Nifty rebounded by over 1 per cent on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி: உச்சம் தொட்ட எஃப்எம்சிஜி, வாகனத் துறை பங்குகள்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



