மும்பை: எரிபொருள் சார்ந்த பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணத்தால், பொதுத்துறை வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகப் பங்குகளில் ஏற்பட்ட கொள்முதல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கிட்டத்தட்ட 0.5 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
மோதலைத் தணிப்பதையும், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதையும் உள்ளிட்ட கருத்துக்கள், பங்குச் சந்தையின் மிதமான மீட்சிக்கு வழிவகுத்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமானது. பிறகு சென்செக்ஸ் 1,079.15 புள்ளிகள் உயர்ந்து 75,286.39 புள்ளிகளை எட்டியது. அதே போல் நிஃப்டி 343 புள்ளிகள் உயர்ந்து 23,345.15 புள்ளிகளாக இருந்தது.
பிற்பகல் 2.50 மணி வர்த்தகத்தில், சென்செக்ஸ் 249.83 புள்ளிகள் உயர்ந்து 74,457.07 ஆகவும், நிஃப்டி 84.40 புள்ளிகள் உயர்ந்து 23,086.55 ஆகவும் இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 325.72 புள்ளிகள் உயர்ந்து 74,532.96 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 112.35 புள்ளிகள் உயர்ந்து 23,114.50 புள்ளிகளாக நிலைபெற்றது. இன்று சுமார் 2,343 பங்குகள் உயர்ந்தும், 1,565 பங்குகள் சரிந்தும், 140 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ட்ரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், என்டிபிசி மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.
இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்பட்ட உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இன்று பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. அதே வேளையில், பயனர்களுக்கு விற்கப்படும் மொத்த டீசலின் விலை லிட்டருக்கு சுமார் ரூ.22 உயர்த்தப்பட்டது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு உயர்வுடன் முடிவடைந்த அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. விடுமுறை முன்னிட்டு ஜப்பான் சந்தை மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தை சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.88 சதவீதம் உயர்ந்து 110.7 அமெரிக்க டாலராக உள்ளது.
Equity benchmark indices Sensex and Nifty gave up most of their intra-day gains to end nearly 0.5 per cent higher on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




