பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லாத ஆளுநர்கள் மதம் பிடித்த யானை போல் செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்குவதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் விமரிசித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லாத ஆளுநர்கள் மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் நீண்ட நாள்களாக விமரிசித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜார்க்கண்ட் நீதிபதி மரண வழக்கில் திருப்பம்: தகவல்களை வெளியிட்ட சிபிஐ
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து காட்டமாக விமரிசித்துள்ளார்.
சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாமனாவில் மகாராஷ்டிர ஆளுநரின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியாகியுள்ள அவரது கட்டுரையில் மத்திய அரசு பாஜக ஆளாத மாநிலங்களை செயல்பட விடாமல் செய்வதற்கு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை
மேலும், “ஆளுநர்கள் மதம்கொண்ட யானை போல் செயல்படும் ஆளுநர்களின் பாகன்கள் தில்லியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அக்கட்டுரையில் இந்த யானைகள் ஜனநாயகம், சட்டம் மற்றும் அரசியல் கலாச்சாரங்களை தங்களது காலடியில் போட்டு மிதிப்பதாகவும் விமரிசித்துள்ளது.
மாநில அரசு முறையாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் மாநில அரசைக் குலைப்பதற்கான அனைத்து சுதந்திரங்களும் மத்திய அரசால் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனைக்கும், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் சிவசேனையின் இந்த விமரிசனம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.