நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கதர் ஆடைகளை மக்கள் வாங்க முன்வர வேண்டும் - 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மக்கள், கதர் ஆடைகளை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 12:11 pm IST

வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மக்கள், கதர் ஆடைகளை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 81 வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

தூய்மை இயக்கத்திற்கு காந்தியின் பங்களிப்பு அளப்பரியது. மேலும் மகாத்மா காந்தி தூய்மையை, சுதந்திரக் கனவுடன் தொடர்புபடுத்தினார்.

இன்றைய இளைஞர்கள், சுதந்திர இயக்கத்திற்கு தூய்மைப் பிரசாரம் எந்த அளவுக்கு பங்களித்து என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். 

இன்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு, தூய்மை இயக்கம் மீண்டும் ஒரு புதிய இந்தியாவின் கனவோடு தொடங்கப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பார்த்தால், அவருடைய வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக பெரிய தீர்மானங்களை எடுத்தார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சுதந்திர இயக்கத்தில் காதிக்கு இருந்த பெருமையை இன்றைக்கும் காதிக்கு வழங்குகிறார்கள் நம்முடைய இளைஞர்கள். தில்லியில் உள்ள காதி ஷோரூம் ஒன்றில் ஒருநாளில் ஒரு கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது என்பதே இதற்கு சான்றாகும். காதி பொருள் களை வாங்கி இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.