ஆட்சியில் இருப்பவர்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் நோக்கில் செயல்படும் காவலர்கள், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சிபிஐ அமைப்பு மீதும் இருப்பதாக குற்றம்சாட்டிய ரமணா, அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் இருந்து காவல்துறை விலக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், "சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்பின் கீழ் வரவேண்டும் என்று அறிவுறுத்தியவர், அரசியல்வாதிகளுடனான தொடர்பை சிபிஐ-யும், காவல்துறையும் முறித்துக் கொண்டு, தங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கையையும், சமூக நன் மதிப்பையும் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.