எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் காணொலி வாயிலாக கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

News image

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Updated On :2 ஏப்ரல் 2022, 4:39 pm IST

புது தில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் காணொலி வாயிலாக கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,  எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். ​​பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரும் தற்போதைய பிரதமர் மோரிசனின் வர்த்தகத் தூதுவருமான டோனி அபோட்டையும் நான் குறிப்பாக வாழ்த்த விரும்புகிறேன். செயல்முறையை விரைவுப்படுத்த அவரது முயற்சிகள் உதவின.

மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு முக்கியமான ஒப்பந்தம் நிறைவடைந்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை எந்தளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது உண்மையில் நமது இருதரப்பு உறவுக்கு ஒரு முக்கியமானத் தருணம். பரஸ்பர தேவைகளை பூர்த்தி செய்யும் பெரும் ஆற்றலை நமது பொருளாதாரங்கள் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்குகுவதோடு உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த திறமையான மற்றும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளின் குழுக்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோரிசனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை வெற்றிகரமாக நடத்த எனது வாழ்த்துகள். மேலும், நாளை நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.