வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மும்பை - கோவா நெடுஞ்சாலைப் பணிகள்: 11 கட்டங்களாக நடைபெறுகிறதா?

மும்பை - கோவா பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:53 am

DIN


மும்பை - கோவா பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் ரூ.131.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். 

அப்போது பேசிய அவர், மும்பை கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 11 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தப் பணிகள் முன்கூட்டியே தொடங்க வேண்டியது. ஆனால் வனத் துறை மற்றும் ரயில்வேத் துறையிடமிருந்து நிலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மும்பை - கோவா இணைப்பு இப்பகுதியின் இயத்துடிப்பு போன்றது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். 

இந்த தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின்போது அரசு நிலங்களில், தொழில் பூங்காக்களும், வாகன முனையமும் அமைக்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.