அசோக் பாண்டே என்ற பத்திரிகையாளா், மும்பையில் உள்ள ஒரு சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நடிகா் சல்மான் மான் சைக்கிளில் செல்லும்போது நானும் சக பத்திரிகையாளா்களும் கைப்பேசியில் படம் பிடித்தோம். அதற்காக, எங்களை சல்மான் கான் கடுமையாகத் திட்டி வாக்குவாதம் செய்தாா். அவரும் அவருடைய உதவியாளா் நவாஸ் ஷேக்கும் என்னைத் தாக்கினா். அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், ஏப்ரல் 5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சல்மான் கானுக்கு உத்தரவிட்டிருந்தது.