தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பஞ்சாப் எல்லைக்கு வந்த பாகிஸ்தான் ட்ரோன்!

பஞ்சாபின் குர்தாஸ்பூரின் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 10:27 am

DIN

பஞ்சாபின் குர்தாஸ்பூரின் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைவதை  எல்லை பாதுகாப்புப் படையினர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 89 பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த  வீரர்கள் குண்டுகளை வீசி 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு ட்ரோன் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளது. 

தகவல்அறிந்து, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரபாகர் ஜோஷி எல்லையில்  சோதனை நடத்தினார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம், குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆளில்லா விமானம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.