அசாமில், கடந்த ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில்,
பாதிக்கப்பட்ட அனைவரும் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
கடந்த ஏழு நாட்களில் விஷ காளான் உட்கொண்டதால் ஒரு மைனர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேல் அசாம் பிராந்தியத்தின் நான்கு மாவட்டங்களில் விஷ காளான் சாப்பிட்ட மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்கள் திப்ருகர், டின்சுகியா, சிவசாகர் மற்றும் சாரைடியோ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேல் அசாம் பகுதியைச் சேர்ந்த பலர் ஒவ்வொரு ஆண்டும் விஷ காளான்களை சாப்பிட்டு நோய்வாய்ப்படுகிறார்கள் என்று மருத்துவர் டிஹிங்கியா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


