மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்முறைச் சம்பவங்களில் மூன்று அரசுகளும் எடுத்த நடவடிக்கை பொருத்தமற்றவை: மாயாவதி

வன்முறைச் சம்பவங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:34 am

DIN

வன்முறைச் சம்பவங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார். 

ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு அன்று நடந்த இருசக்கர பேரணியில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பேர் காயமடைந்தனர். 

குஜராத்தின் ஹிம்மத்நகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி அன்று கல் வீச்சு மற்றும் மோதல்களைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்த விதம், அரசு தொடர்ந்த நடவடிக்கைகள், பழிவாங்கும் வகையில் தெரிகிறது. இது பொருத்தமற்ற நடவடிக்கை.  

இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் புதிய இந்தியாவுக்கு வழிவகுக்குமா? என்று மாயாவதி இந்தியில் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசைக் கடுமையாகத் தாக்கிய அவர், குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் நீதித்துறையைப் புறக்கணித்து காவல்துறையும் அரசும் செயல்படுகின்றன.

"இது தீங்கிழைக்கும் செயல் மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியைக் கேலிக்கூத்தாக்கும் செயல்".

சட்டத்தின் ஆட்சிக்கு, தண்டனை என்பது சட்ட நடைமுறையின்படி இருக்க வேண்டுமே தவிர, அது தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.