விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆந்திரம்: தொழிற்சாலையில் தீ விபத்து; 6 பேர் பலி

ஆந்திரத்தில்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:27 am

ஆந்திரத்தில்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தைச் சேர்ந்த அக்கிரெட்டிகுடேம் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று(ஏப்ரல்-13) இரவு நைட்ரிக் அமிலம் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், விபத்தின்போது  பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.