பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சி தொடா்கிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

 நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:59 pm

DIN

 நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

ஹைதராபாதில் தெலங்கானா மாநில நீதிபதிகளின் இரு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் அவா் பேசியதாவது:

நமது நீதித்துறை பெரும் சுமையுடன் பணியாற்றி வருகிறது. காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதன் மூலமும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் இந்தச் சுமையைக் குறைத்து, நீதித்துறையின் செயல்பாட்டை மேலும் செம்மையாக்க முடியும். நான் பதவியேற்றதில் இருந்து இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்.

கீழமை நீதிமன்றங்களில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க முடியும்.

நீதிபதிகள் சச்சரவுகளுக்குத் தீா்வு வழங்கும்போது மனுதாரா்களின் சூழலை உணா்ந்து செயல்பட வேண்டும். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆதாரங்களையும், சாட்சிகளையும் ஆய்வு செய்யும்போது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இன்றைய நவீன காலகட்டத்துக்கு ஏற்ப நீதிபதிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித அச்சமும் இன்றி பணியாற்ற வேண்டும். நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதை நான் அறிவேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீதிமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் நீதிபதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நீதிபதிகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தங்களைப் பேண வேண்டும். நீங்கள் உங்கள் பொருளாதாரச் சுமைகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே திறமையாகப் பணியாற்ற முடியும். விரைவில் ஊதியக் குழு மூலம் நீதிபதிகளுக்கு நல்ல செய்தி வரும். நீதிபதிகள் கூடுதல் நேரம் பணியாற்றி வழக்குகளுக்கு விரைந்து தீா்வுகாண முயல வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.