இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 975 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 975 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 796 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | சிறந்த சேவை: டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு தங்கப் பதக்கம்
இதுவரை மொத்தம் 4,25,07,834 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,747 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 11,366 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
இதுவரை மொத்தம் 1,86,38,31,723 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.