கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 41 பேர் பலி 

கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 4:29 pm IST

கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தென்கிழக்கு மாகாணத்தின் ஸ்பெராய் மாவட்டத்திலும், கிழக்கு குனார் மாகாணத்தின் ஷால்தான் மாவட்டத்திலும் வஜிரிஸ்தான் அகதிகள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

கோஸ்ட் மாகாணத்தில் டூரன்ட் கோடு அருகே பாகிஸ்தான் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று கோஸ்ட்டின் தகவல் மற்றும் கலாசார இயக்குனர் ஷபீர் அகமத் உஸ்மானி தெரிவித்தார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோஸ்டைச் சேர்ந்த பழங்குடித் தலைவர் ஜாம்ஷித், 40க்கும் மேற்பட்டோர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். 

சிலரின் முகங்களும் உடல்களும் கருகி அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தன என்று பாதிக்கப்பட்ட சிலரை அடக்கம் செய்ய உதவிய கோஸ்டைச் சேர்ந்த ஒரு மத அறிஞர் அப்துல் வஹாப் கூறினார். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.