கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு’: ரிபுன் போரா குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா

Updated On :18 ஏப்ரல் 2022, 10:26 am

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் தலைவருமான ரிபுன் போரா நேற்று காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸின் இணைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு ரிபுன் போரா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் பாஜகவிற்கு காங்கிரஸ் சவாலாக இருந்தது. 2021 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அசாம் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த ஒருபகுதி மூத்த தலைவர்களுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சியின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்தனர்.

மேலும், கடந்த 6 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினர்களாக நாட்டின் முக்கியப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இரண்டு முறை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். மாநில பிரச்னைகளையும் எழுப்பினேன்.

அசாமின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றேன். ஆனால், எனது கட்சி உறுப்பினர் தவறாக வாக்களித்ததால் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பாஜக கைப்பற்றியது.

நான் மிகுந்த வலியுடன் உங்களிடம் வெளிப்படையாக ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புகிறேன். அசாம் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் பாஜகவை எதிர்த்து சண்டையிடுவதற்கு பதிலாக மாநில பாஜக அரசுடனும் குறிப்பாக முதல்வருடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.