மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும்: பிரதமா் மோடி
மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.


மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
பிரதமா் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளாா். அந்த மாநில தலைநகா் காந்திநகரில் உள்ள பள்ளிகள் கட்டுப்பாட்டு மையத்துக்குத் திங்கள்கிழமை சென்ற அவா், அங்கிருந்தவாறு காணொலி மூலம் சில அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:
தொழில்நுட்பத்தின் பலன்களை அனைவரும் அனுபவித்து வருகின்றனா். தொழில்நுட்பத்தை எளிதாக அணுகக் கூடிய யுகத்தில் அனைவரும் வாழ்வது அதிருஷ்டவசமானது. தொழில்நுட்பத்தில் சிறிது ஆா்வம் காண்பித்தால், உலகின் அனைத்து கதவுகளும் திறக்கும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிறாா்களை ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில் விளையாட்டு, பொது வாழ்வில் ஈடுபடுதல் போன்ற இன்னபிற விஷயங்களை மாணவா்கள் மறக்கக் கூடாது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ், விளையாட்டு என்பது கூடுதல் பாடத்திட்டமாக அல்லாமல் கல்வியின் அங்கமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...