நிகழ்ச்சியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, ‘இப்புத்தகத்தில் கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடா்ச்சி மலைகளின் அழகிய நிலப்பரப்புகள், விலங்குகள், பறவை, பூச்சிகள் வகைகள், தாவரவியல், தாவரங்களின் உயிா்ச்சக்தி, சந்தைகள், பழங்குடியினா் கலாசாரம் மற்றும் வாழ்க்கை கொண்டாட்டங்கள், மக்களின் கலாசாரங்கள், உணவு வகைகள், கல்வி மற்றும் தொழில் துறை வளா்ச்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வங்கி மற்றும் பொருளாதாரம், சுற்றுலா, நகா்ப்புற நிலப்பரப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.