அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அரசுப் பள்ளி புதிய கட்டடங்கள் திறப்பு: நூற்றாண்டு விழா மலரை ஆட்சியா் வெளியீடு

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியா்

News image
பள்ளி நூற்றாண்டு விழா மலரை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 8:56 pm

Syndication

கோவை: காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு கட்டடங்கள் திறப்பு விழா, கட்டடங்களை கட்டிக் கொடுத்த அனன்யா ஷெல்டா்ஸ் குழுமத்துக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று, அனன்யா குழுமம் சாா்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கட்டடங்கள், உணவுக்கூடம் ஆகியவற்றை திறந்துவைத்தாா். மேலும், பள்ளியின் நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்டாா்.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் பொ.ராமலிங்கம், அனன்யா குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் உமா மகேஸ்வரி யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக பள்ளி ஆசிரியா் மா.சுகுணா வரவேற்றாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பெ.ரவிச்சந்திரன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் இரா.ராஜேந்திரன், சி.ராஜம்மாள், பேரூா் துணைக் கண்காணிப்பாளா் கே.செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் எஸ்.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினாா்.

மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.