நிலக்கரி கையிருப்பு குறித்து மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், மாநிலங்களில் நிலக்கரி இருப்பு மற்றும் தேவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.