தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கரோனா: சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 4:05 am

DIN

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,067 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 40 பேர் பலியானதையடுத்து மொத்த எண்ணிக்கை 5,22,006ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 11,860இல் இருந்து 12,340ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,25,13,248ஆக உள்ளது.

இதுவரை 186.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.