லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் வளாகத்திலிருந்து ஒலி வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஒலிபெருக்கிகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வழிபாட்டு முறையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் அது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
மகாராஷ்டிராவின் நாசிக் காவல்துறை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்த சில நாட்களுக்குப் பிறகு, உ.பி. முதல்வரின் அறிக்கை வந்துள்ளது.
ஆசான் வழங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும், பஜனைகளை இசைப்பதற்கும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நாசிக் காவல்துறை தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு இடங்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த மே 3 ஆம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









