எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா கடுமையாக பாதித்தவர்களில் பெண்களுக்கே அதிக அறிகுறிகள்: ஆய்வு

கரோனா பாதித்து நீண்ட நாள்கள் சிகிச்சையில் இருந்தவர்களில், ஆண்களை விடவும், பெண்களுக்கே அதிக அறிகுறிகள் பாதிப்புகள் நீண்ட காலத்துக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News image
கரோனா கடுமையாக பாதித்தவர்களில் பெண்களுக்கே அதிக அறிகுறிகள்: ஆய்வு
Updated On :21 ஏப்ரல் 2022, 12:12 pm

DIN


லண்டன்: கரோனா பாதித்து நீண்ட நாள்கள் சிகிச்சையில் இருந்தவர்களில், ஆண்களை விடவும், பெண்களுக்கே அதிக அறிகுறிகள் பாதிப்புகள் நீண்ட காலத்துக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களின் உடல்நலம் என்ற மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில், கரோனா பாதித்திருந்த போது, பெரும்பாலான பெண்களே அதிக மயக்கம், நெஞ்சுவலி, படபடப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஆண்களைவிடவும் அதிகமாக உணர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு 12 வாரங்கள் சிகிச்சை பெற்றுவர்களை நீண்ட கரோனா நோயாளிகள் என்கிறார்கள். அந்த வகையில், இத்தாலியில் உள்ள பார்மா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவர்களில் 91 சதவீதம் பேர் 5 மாதங்களுக்கும் மேல் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளனர். அவர்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிக பாதிப்புக்கும், அதிக நாள் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.