சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குழந்தையின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட தாய்...தில்லியில் பரபரப்பு

குழந்தையை சுமந்தபடி வீடு திரும்பும் தாயை குற்றம்சாட்டப்பட்டவர் துரத்துவது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
சிசிடிவி காட்சி
Updated On :22 ஏப்ரல் 2022, 6:11 am

DIN

தென் மேற்கு தில்லியில் இளம் பெண் ஒருவர், அவரின் குழந்தையின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த அந்த அடையாளம் தெரியாத நபர் தப்பித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சாகர் பூர் காவல் நிலையத்தில் மதியம் 2:00 மணியளவில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே அந்த இடத்திற்கு சென்றோம். அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

குழந்தையை சுமந்தபடி வீடு திரும்பும் தாயை அந்த நபர் துரத்துவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதியம் 2:10 மணியளவில் குற்றவாளி அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை அடையாளம் கண்டு அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவரும் அந்த பெண்ணும் முன்னதாக அண்டை வீடுகளில் வாழ்ந்துவந்தது தெரியவந்தது. தற்போது, அந்த பெண் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.