நாட்டில் எண்ம முறையிலான (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யுபிஐ எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவர்த்தை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.
சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட எண்ம முறையில் பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. எண்ம முறை பணப் பரிவர்த்தனையால் பணத்தை எடுத்துச் செல்லவோ, ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை.
தொழில் நுட்பத்தின் சக்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.