தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தில்லியின் சத்யநிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
கடந்த 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ஐந்து பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் மேலும் சிகியுள்ளனரா என்று அப்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.