புது தில்லி: நாட்டில் 6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் கரோனா தடுப்பூசி அவசர காலபயன்பாட்டிற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 6 முதல் 12 வயதான சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது