புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கராச்சி பல்கலையில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காரில் குண்டு வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 11:16 am

DIN

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காரில் குண்டு வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின. 

காவல்துறை வட்டாரங்களின்படி, 

வேனில் 7 முதல் 8 பேர் வரை இருந்தனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.