தீவிரமான சளிக் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்யப்பட வேண்டும். கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்புக் கேடயமாக தடுப்பூசிகள் உள்ளன. எனவே, தகுதியுடைய அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து பெற்றோருக்கும் சிறாா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய அளவில் மருந்துகளையும், மருத்துவப் பணியாளா்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.