ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அசாம் மக்களின் நேசத்திற்கு வட்டியுடன் திரும்ப செலுத்துவேன்: பிரதமர்

கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் திபுவில் இன்று ‘அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில்’ பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

News image
அசாம் மக்களின் நேசத்திற்கு வட்டியுடன் திரும்ப செலுத்துவேன்: பிரதமர்
Updated On :28 ஏப்ரல் 2022, 12:33 pm

DIN

கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் திபுவில் இன்று ‘அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில்’ பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

கால்நடை மருத்துவக்கல்லூரி (திபு), பட்டப்படிப்பு கல்லூரி (மேற்கு கர்பி ஆங்லாங்), வேளாண் கல்லூரி (கோலோங்கா, மேற்கு கர்பி ஆங்லாங்) ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கர்பி ஆங்லாங் மக்களின் அன்பான வரவேற்புக்காக நன்றி. “சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவும், அசாமின் மகத்தான புதல்வர் லச்சித் போர்புக்கானின் 400 ஆவது பிறந்த நாளும் இதே காலத்தில் வருகிறது. தேசபக்திக்கும், தேச சக்திக்கும் லச்சித் போர்புக்கானின் வாழ்க்கை உத்வேகமாக உள்ளது. கர்பி ஆங்லாங்கிலிருந்து நாட்டின் மகத்தான நாயகனுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் இரட்டை எஞ்சின் அரசு பணியாற்றுகிறது. அசாமின் நிரந்தர அமைதிக்கும், துரித வளர்ச்சிக்கும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவது துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2,600-க்கும் அதிகமான நீர்நிலைகளை கட்டமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது என்றார்.

அசாம் மக்களின் நேசத்திற்கு, வட்டியுடன் அவர்களுக்கு திரும்ப செலுத்துவேன் என்று உறுதி அளித்த பிரதமர், இந்தப் பகுதியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, உரையை நிறைவு செய்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.