பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார்.
ஜோ பைடன் / நரேந்திர மோடி
ஜோ பைடன் / நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் உச்சிமாநாடு வருகிற மே மாத இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.  

மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த குவாட் உச்சிமாநாட்டில் பாதுக்காப்பு தொடர்பான ஆலோசனைகள், அங்கம் வகிக்கும் நாடுகளின் உறவுநிலை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com