லாலு பிரசாத் சிங்கப்பூர் செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்றத்திற்காக சிங்கப்பூர் பயணம் செய்ய சிபிஐ அனுமதி அளித்துள்ளது.
லாலு பிரசாத் சிங்கப்பூர் செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி!
Published on
Updated on
1 min read

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்றத்திற்காக சிங்கப்பூர் பயணம் செய்ய சிபிஐ அனுமதி அளித்துள்ளது.

74 வயதாகும் லாலு பிரசாத், பாட்னாவில் உள்ள அவருடைய வீட்டில் கீழே விழுந்தாா். அதில் அவருடைய உடலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக அவா் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். 

கருவூல மோசடி ஐந்தாவது வழக்கில், டொரண்டா கருவூலத்தில் ரூ.139 கோடி முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், கடந்த ஏப்ரல் மாதம் ஜாமின் பெற்றுள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றும் அதற்காக சிபிஐ வசம் உள்ள தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் தர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

தற்போது சிறுநீரக மாற்றத்திற்காக சிங்கப்பூர் பயணம் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com