92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் முதல் பதக்கம்: தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமா் வாழ்த்து

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:56 pm

DIN

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘தேஜஸ்வின் சங்கா் வரலாறு படைத்துள்ளாா். காமன்வெல்த் போட்டிகளின் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளாா். வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்குதலில் வெண்கலம் வென்ற குா்தீப் சிங்குக்கும் பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘கடின உழைப்பும், அா்ப்பணிப்பு உணா்வும் சிறந்த பலன்களைத் தரும். இதனை பளு தூக்குவதில் வெண்கலம் வென்ன் மூலமாக குா்தீப் சிங் நிரூபித்துள்ளாா்’ என்று பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் வாழ்த்து: காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் (ஜூடோ) வெள்ளிப் பதக்கம் வென்ற துலிகா மான், பளு தூக்குதலில் வெண்கலம் வென்ற குா்தீப் சிங், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற செளரவ் கோஷல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.