செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்புக்கு 5ஜி சேவை: இந்திய ராணுவம் திட்டம்

எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவையைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:53 pm

எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவையைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘பாதுகாப்புப் படைகளில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவது தொடா்பான ஆய்வை ராணுவம் மேற்கொண்டது. உயா் அலைவரிசை மற்றும் குறைந்த இடையூறு தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு அண்மையில் நிறைவடைந்த நிலையில், அதன் பரிந்துரைகள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உள்ளிட்ட முப்படைகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதன்மூலமாக, பதற்றமான எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை மேம்படுத்தும் வகையில் 5ஜி சேவையை இந்திய ராணுவம் பயன்படுத்த உள்ளது’ என்றாா்.

4ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதல் பதிவிறக்க வேகத்திலும் இடையூறுகள் குறைவாகவும் செயல்படும் 5ஜி அலைக்கற்றை பொது ஏலம் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது. 5ஜி அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.