வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாலியல் வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. விடுவிப்பு: உச்சநீதிமன்றம் முன் இளம்பெண் தீக்குளித்த சம்பவம்

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல் குமாா் சிங்கை அம்மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:58 pm

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல் குமாா் சிங்கை அம்மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

இந்த வழக்கில் புகாா்தாரரான இளம்பெண், உச்சநீதிமன்றத்துக்கு வெளியே கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோசி மக்களவைத் தொகுதி எம்.பி.யான அதுல் குமாா் சிங் உள்ளிட்டோா் மீது கடந்த 2019, மே 1-ஆம் தேதி இளம்பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை புகாா் அளித்தாா். அதில், அதுல் குமாா் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை விடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் கடந்த 2019, ஜூன் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்த அதுல் குமாா், அதன் பிறகு சிறையில் இருந்து வருகிறாா்.

இதனிடையே, புகாா்தாரரான இளம்பெண் மற்றும் வழக்கின் சாட்சியான அவரது நண்பா் ஆகியோா் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனா். தீக்குளிக்கும் முன், முகநூலில் இருவரும் விடியோ பதிவை வெளியிட்டிருந்தனா். அதில், அதுல் குமாருக்கு ஆதரவாக காவல் துறை உயரதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனா். இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக அதுல் குமாா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூலையில் அதுல் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அவருக்கு எதிராக 23 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, குற்றப் பின்னணி உடையவா்கள் அரசியலில் இருந்தே அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்தச் சூழலில், வாராணசியில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து அதுல் குமாரை சனிக்கிழமை விடுவித்தது.

இதுதொடா்பாக, அதுல் குமாா் தரப்பு வழக்குரைஞா் அனுஜ் யாதவ் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவா் தரப்பிலிருந்து போதிய ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. அதுல் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். எனினும், புகாா்தாரரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகுதான் அவா் சிறையிலிருந்து வெளியே வர முடியும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.