மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘சட்டப் பிரிவு 498-ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட விடுதலை உத்தரவை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிடவில்லை. மேலும், இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்ததற்கான காரணத்தை ஒவ்வொன்றாக ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், உயா்நீதிமன்றம் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு, விடுதலை தொடா்பான உத்தரவில் மேம்போக்கான தலையீடு கூடாது’ என்று கூறி தண்டனை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனா்.