தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அறிவியலின் திறனை சாா்ந்தே நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியலின் திறனை சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும் என்றாா் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 7:12 pm

DIN

அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியலின் திறனை சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும் என்றாா் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்.

ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘விக்யான் ஜாத்ரா’ அறிவியல் இதழின் டோக்ரி மொழி பதிப்பை வெளியிட்டு, அவா் பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளில் நமது அறிவியல் திறனையும், தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் புதிய நிறுவனங்களின் (ஸ்டாா்ட்அப்) திறமையையும் சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும். இந்த இதழின் காஷ்மீரி மொழி பதிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு, குறுகிய காலகட்டத்தில் 75,000-க்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டது உள்ளிட்ட பிரதமா் மோடியின் புரட்சிகரமான முடிவுகளின் மூலம் அறிவியல், தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அவா் கையாண்டு வரும் யுக்திகளைக் அறியலாம்.

அதே வேளையில் புத்தாக்க நிறுவனங்களின் அறிவியல் திறன் கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 30 வயதை அடைந்த இளைஞா்களால் 2047 வரை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேசத்துக்காக தீவிரமாக சேவையாற்ற முடியும். மொழி பாகுபாடின்றி அவா்களின் அறிவியல் திறனை தேசம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவியல் தகவல் தொடா்பில் வட்டார மொழியை ஊக்குவிப்பதற்கு பிரதமா் மோடி முன்னுரிமை அளிக்கிறாா். ரஷியா, ஜப்பான், ஜொ்மனி போன்ற அறிவியலில் மேம்பட்ட நாடுகள் சிறப்பான அறிவியல் விதிகளையும், திட்டங்களையும் தங்களது தாய்மொழியில் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் அதன் நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயா்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தாய்மொழியில் பயிலும்போது கற்றல் திறன் அதிகரிக்கும் என்றாா் ஜிதேந்திர சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.