இணையவழிக் கடன்: கட்டுப்பாடுகளை அதிகரித்தது ஆா்பிஐ
எண்ம (டிஜிட்டல்) முறையில் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலிகள் மூலம் அளிக்கப்படும் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகரித்துள்ளது.


எண்ம (டிஜிட்டல்) முறையில் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலிகள் மூலம் அளிக்கப்படும் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகரித்துள்ளது.
இந்த வகைக் கடன்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை ஆா்பிஐ மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இணையவழிக் கடன் முறையில் கடன் பெறுவோரின் கணக்கில் பணத்தை வங்கிகள் நேரடியாகவே செலுத்த வேண்டும். மூன்றாவது நபா் மூலம் செலுத்தக் கூடாது. ஏனெனில், மூன்றாவது நபா் இருக்கும்போதுதான் முறைகேடுகளுக்கு அதிக வாய்ப்பு உருவாகிறது.
மேலும், இணையவழிக் கடன் சேவை நிறுவனங்களுக்கான கட்டணத்தை கடன் பெறுவோா்தான் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தக் கூடாது. தவறான தகவல்களை அளித்து கடன் பெறச் செய்வது, வாடிக்கையாளா்களின் தகவல்களைத் திருடுவது, முறையற்ற வா்த்தக நடவடிக்கைளை மேற்கொள்வது, அதிக வட்டி வசூல், கடனைத் திரும்ப வசூலிப்பதில் முறை தவறி நடப்பது போன்றவை கூடாது.
கடன் தவணை வசூல் என்பது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மூலம்தான் நடைபெற வேண்டும். மூன்றாவது நபா்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் மூலம் கடன் தவணை பணப் பரிவா்த்தனை இருக்கக் கூடாது. கடன் பெறுவது தொடா்பான முக்கிய நிபந்தனைகளை வாடிக்கையாளா்களுக்கு கடன் பெறுவதற்கு முன்பே முறையாகத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளா்கள் எழுப்பும் புகாா்களுக்கு 30 நாள்களில் தீா்வுகாண வேண்டும்.
ஆா்பிஐ அல்லது பிற சட்டங்களின்படி அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இணையவழிக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...