தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாக தெருவோர வியாபாரிகள்

தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 7:07 pm

DIN

தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். அந்த விழாவுக்கு சுமாா் 7,000 விருந்தினா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவா்களும், உயரதிகாரிகளுமே சிறப்பு விருந்தினா்களாக விழாவில் பங்கேற்பா்.

ஆனால், திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், பிணவறை பணியாளா்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது நடைபெற்ற விழாவில் முன்களப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டடத் தொழிலாளா்கள், அலங்கார ஊா்திகளைத் தயாா்செய்த பணியாளா்கள் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.