தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும்: மம்தா பானா்ஜி

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 6:59 pm

DIN

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

சுதந்திரத்தின் உண்மையான சாரத்தை இந்தியா உணர வேண்டும். சுதந்திரத்தின் புனித பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்குள்ள கண்ணியம் நிலைநாட்டப்பட வேண்டும்.

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும். அனைத்து பெண்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எந்த அடக்குமுறை சக்திகளும் மக்களைப் பிரிக்காமல், ஒவ்வொரு நாளையும் நல்லிணக்கம் வரையறுக்க வேண்டும். இவை அனைத்தும் உள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.