காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மிகவும் ஊழலில் திளைத்த மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது: பாஜக

சுதந்திர இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளதாக  பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 4:09 pm

DIN

சுதந்திர இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளதாக  பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மாநிலத்தில் ஊழல் பெருகியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுடன் விரைவில் ஊழல்வாதிகள் சிறையில் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆளும் திரிணமுல் அரசுக்கு எதிராக மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் பிர்பம் மாவட்டத்தில் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார்.

இந்தப் போராட்டம் குறித்து மாநில பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறியதாவது: “ ஆளும் திரிணமுல் அரசு மேற்கு வங்கத்தை கொள்ளையடித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் உள்ள அரசுகளில் மேற்கு வங்க அரசு அதிக ஊழலில் திளைத்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்கள் சிறைக்கு செல்வதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசின் தலைவராக முதலமைச்சர் இருப்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.