'சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது'

சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா


புது தில்லி: சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 20 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சிசோடியாவின் வீடு மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாணவர்களின் வருங்காலத்தை ஒளிமயமாக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். 

நாட்டுக்காக நல்ல பணிகளை ஆற்றி வருவோரை துன்புறுத்துவது என்பது துரதிருஷ்டவசமானது. அதனால்தான் உலகிலேயே நமது நாடு முதல் இடத்துக்கு வரமுடியவில்லை என்று சிசோடியா கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com