பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி-வேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 6:28 am

உத்தரப் பிரதேசத்தின் தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி-வேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

ஞாயிறன்று இரவு மிர்சாபூர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி வேனுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தனர். 

நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் இருவர் திங்கள்கிழமை காலை மருத்துவமனையில் இறந்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய் தெரிவித்தார்.

இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதமடைந்தது.

இறந்தவர்கள் ஆதில் (25), அவரது கர்ப்பிணி மனைவி அஸ்மா (24), மஷ்கூர் (26), அவரது மனைவி ருக்சார் (27), ரிஹானா (38), சுல்தானா (35) என அடையாளம் காணப்பட்டனர்.

லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.