கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ராஜஸ்தானில் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராஜஸ்தானில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கோட்டா, ஜாலவாட் மற்றும் டோங்க் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:04 am

DIN

ராஜஸ்தானில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கோட்டா, ஜாலவார் மற்றும் டோங்க் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

கடந்த 24 மணி நேரத்தில் ஜாலவாட் மாவட்டத்தில் மிகக் கனமழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். 

இது, கடந்த 24 மணி நேரத்தில் தாக் தெஹ்சிலில் 284 மி.மீ, கோட்டாவில் 126 மிமீ மிகக் கனமழை பதிவாகியுள்ளது. சித்தோர்கர் மற்றும் பில்வாராவில் 184 மிமீ மற்றும் 160 மிமீ அதி கனமழையும், பிரதாப்கர் மாவட்டத்தில்258 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. 

கோட்டாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாலவார் மாவட்டத்திலும் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

டோங்க் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோட்டா பிரிவின் பாரான் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டா பகுதியில் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பூண்டி, பாரான் மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

திங்களன்று கோட்டாவில், மீட்புக் குழுக்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். நீர் சூழப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. 

அதே நேரத்தில், டோங்க் மாவட்டத்திலும் மழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பிசல்பூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.