சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :22 மார்ச் 2026, 8:11 pm

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனுரைச் சோ்ந்த ராமராஜ் மகன் தாமோதரன் (28). சிவகாசியில் உள்ள நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த இவா், அந்த ஆலை வளாகத்திலேயே குடியிருந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெட்டக லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து லாரி சக்கரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்டக லாரி ஓட்டுநா் ஆவுடையப்பனை (51) கைது செய்தனா்.