புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குஜராத்தில் பேரணியைத் தொடங்கினார் பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப் பேரணி இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

News image

பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :1 டிசம்பர் 2022, 12:13 pm

DIN


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப் பேரணி இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கத்தில் இந்தப் பேரணி தொடங்கியுள்ளது.

குஜராத்தில் முதல் கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 3 மணி நிலவரப்படி 48.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று 50 கிலோமீட்டர் பேரணியைத் தொடங்கியுள்ளார்.

மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணி, 6.30 மணியளவில் காந்தி நகர் தெற்கு தொகுதியில் நிறைவு பெறுகிறது. சுமார் 35 இடங்களில் வாகனத்தை நிறுத்தி வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.