எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ம.பி.யில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நலப் பாதிப்பு! 

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :3 டிசம்பர் 2022, 6:12 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை இரவு தார் பகுதியில் உள்ள தம்னோத் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட பிறகு, பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, திருமண விழாவில் சமைத்த உணவு விஷமாக மாறியுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.