டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம்

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 11:23 pm

DIN

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை; அது விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.

நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.

அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.