மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம்

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 11:23 pm

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை; அது விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.

நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.

அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.